search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் கருப்பண்ணன்"

    பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மாற்றுத்தொழில் செய்ய மானியத்துடன் கூடிய கடன் வழங்க தயாராக உள்ளதாக அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். #PlasticBan #KCKaruppannan
    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா மற்றும் திருமணமான பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் தங்க நாணயம் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் 928 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள், 301 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், 38 பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்களை வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் கே.சி.கருப்பணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் ஆலைக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி இருந்தாலும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்கு தேவையான ஆவணங்களை தயார் செய்து வருகிறோம். விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும்.

    கீழ்பவானி வாய்க்கால் 2-ம் போக பாசனத்திற்கு நிலக்கடலை மற்றும் எள் பயிரிடுவதற்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும். கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு நிவாரணத்தொகை கொடுக்கிறதோ இல்லையோ தமிழக அரசு 3 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

    2011ம் ஆண்டு பிளாஸ்டிக் பயன்படுத்துவது குறித்து அப்போதைய முதல்வர் தலைமையில் ஆய்வுக்குழு ஏற்படுத்தப்பட்டு 100-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தெரியவந்தது.

    அதில் தண்ணீர் பாக்கெட், உணவு பொருள்கள் பயன்பாடு உள்பட 13 பொருட்கள் மறுசுழற்சி செய்ய முடியாது என்பதால் அதனை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களால் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் கேடு ஏற்படுகிறது.

    சாக்கடைகளில் பிளாஸ்டிக் பாக்கெட்கள் அடைத்து நோய் கிருமி உருவாக காரணமாகின்றன. குளங்களில் பிளாஸ்டிக் பொருட்களாகவே தென்படுகின்றன. பல்வேறு ஆய்வுக்கு பின்னரே பிளாஸ்டிக் தடைக்கு முடிவு செய்யப்பட்டது.

    பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மாற்றுத்தொழில் செய்ய மானியத்துடன் கூடிய கடன் வழங்க தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அமைச்சர் கருப்பணன் கூறினார். #PlasticBan #KCKaruppannan
    கட்சி பொறுப்பில் பலர் இருந்தும் அங்கன்வாடி கட்டிடம் கட்ட, இடத்தை தேர்வு செய்யாமல் அமைச்சர் சென்று ஊரின் மையப்பகுதியில் பள்ளி கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்தது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. #TNMinister #Karuppannan
    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட க.புதூர் இங்கு 700-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் சார்பில் ரூ 8.5 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி பள்ளி கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

    கட்டிடம் கட்ட பூமி பூஜை போடுவதற்கு சுற்று சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் வந்தார். அந்த பகுதியை சேர்ந்த கட்சிக்காரர்கள் ஊருக்கு ஒதுக்கு புறமான இடத்தை தேர்வு செய்து வைத்து, கட்சிக்காரர்கள் புடைசூழ அமைச்சரை அழைத்து சென்றார்கள். சிறிது தூரம் நடந்ததும் அமைச்சர் இப்படி ஊருக்கு ஒதுக்கு புறமான இடத்தில் அங்கன்வாடி பள்ளி அமைந்தால் குழந்தைகளுக்கு பதுகாப்பாக இருக்காது? மேலும் ஊரை விட்டு ஒதுக்கு புறமாக உள்ளது. வேறு இடத்தை தேர்வு செய்யுங்கள் என்று கூறியதும்,

    மீண்டும் ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி ஸ்ரீ நகர் என்ற இடத்திற்கு அழைத்து சென்ற கட்சியினர் அங்கும் சரியான இடம் அமையாததால் அமைச்சர் தான் வந்த காரை விட்டு இறங்கி, கொளுத்தும் வெயிலில் கட்சிக்காரர் ஒருவரது மோட்டார் சைக்கிளில் ஏறி ஊரின் மைய பகுதியில் உள்ள, ஏவிஎம் நகர் பழைய தண்ணீர் தொட்டி இருந்த இடத்திற்கு சென்று பார்த்து இடத்தை தேர்வு செய்தார்.

    பிறகு அங்கு பூமி பூஜை செய்து வேலையை துவக்கிவைத்தார். கட்சி பொறுப்பில் பலர் இருந்தும் அங்கன்வாடி கட்டிடம் கட்ட, இடத்தை தேர்வு செய்யாமல் அமைச்சர் சென்று ஊரின் மையப்பகுதியில் பள்ளி கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்தது பொதுமக்கள் மத்தியில் வியப்பாக பேசப்பட்டதோடு அமைச்சரையும் மக்கள் பாராட்டினர். #TNMinister #Karuppannan
    ×